பாகிஸ்தானுடனான உறவுகள் சுமுகமாக இருக்காது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இந்திய இராணுவத்தினர் இருவர் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இருநாட்டு உறவுகளும் மோசமடைந்துவருகின்றன.இந்தியப் படைவீரர் ஒருவர் தலைவெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கடந்தவாரம் அப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களுக்கு பாகிஸ்தான் படையினரே பொறுப்பு என்று இந்தியா குற்றஞ்சாட்டுகின்றது.
ஆனால் பாகிஸ்தான் அந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது.
தமது படைவீரர்கள் கொல்லப்பட்ட செயலை காட்டுமிராண்டித் தனமானது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கண்டித்துள்ளார்.
அண்மைய இருதரப்பு மோதல்களில் பாகிஸ்தான் படைவீரர்கள் இருவரும் கொல்லப்பட்டார்கள்.
இந்த சம்பவங்களால் இருநாட்டு உறவுகளிலும் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment