போர்க் கப்பல்களை தாக்கும் அதி நவீன ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்தது.
இதுகுறித்து ஈரான் அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் கப்பற்படை பயிற்சி கடந்த ஐந்து நாட்களாக நடந்தது. இதில் பல்வேறு ஆயுதங்களின் பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியின் கடைசி நாளில் 200 கிலோமீற்றர் இலக்கை தாக்கும் கேதர் என்ற அதிநவீன ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை வெற்றியில் முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரான் தன்னுடைய இராணுவ வலிமையை காட்டுவதற்காகவே பரிசோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment