click me

Showing posts with label பரங்கிப்பேட்டை வானிலை செய்திகள். Show all posts
Showing posts with label பரங்கிப்பேட்டை வானிலை செய்திகள். Show all posts

Wednesday, December 19, 2012

பரங்கிப்பேட்டை கடலில் காற்று பலமாக வீசுவதால் வத்தக்கரை - அன்னங்கோவில் பகுதி வெறிச்சோடியது.


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperகடலில் காற்று பலமாக வீசியதால் பரங்கிப்பேட்டை பகுதி கடற்கரையோர மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் நேற்று வத்தக்கரை - அன்னங்கோவில் பகுதி வெறிச்சோடியது.
பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர், பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து, வத்தக்கரை - அன்னங்கோவில் பகுதியில் விற்பனை செய்கின்றனர். உயர் ரக மீன் வகைகள், இறால், நண்டு உள்ளிட்டவைகள் பெரும்பாலும் அன்னங்கோவிலில் இருந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதால் வத்தக்கரை - அன்னங்கோவில் பகுதியில் எப்போதும் கனரக வாகனங்கள் வந்து செல்வதும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படும்.

Wednesday, October 31, 2012

பரங்கிபேட்டை மழை கால புதியபடங்கள்

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்தக் காற்றழுத்த மண்டலம் தற்போது "நீலம்" புயலாக உருவெடுத்துள்ளது. இதனால் கடந்த 4 நாட்களாக பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.  MYPNO வலைத்தளம் விடாது மழை-புயல் செய்திகளையும் புகைப்படங்களையும் சிரமம் பாராமல் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. 


காஜியார் தெரு
தெத்துக்கடை தெரு
தெத்துக்கடை தெரு
பெரிய மதகு
பக்கிங்காம் - பெரியமதகு
பக்கிங்காம் - நடைப்பாலம்
பக்கிங்காம் - தரைப்பாலம்
வீடு திரும்பும் பவர்பிளாண்ட் பணியாளர்கள் 
சிறியமதபகு - பக்கிங்காம்
பக்கிங்காம் - சாலிகண்டு தைக்கால்
பரங்கிப்பேட்டை -புதுச்சச்திரம் சாலையோரம்
 நீரில் முழ்கியுள்ள நிலம்: பரங்கிப்பேட்டை -புதுச்சச்திரம் சாலை
பரங்கிப்பேட்டை -புதுச்சச்திரம் சாலை: முதியோர் இல்லம் அருகில்
 
பவர் பிளாண்ட் தரைப்பலம் : பரங்கிப்பேட்டை -புதுச்சச்திரம் சாலை
நன்றி :mypno

Tuesday, October 30, 2012

பரங்கிப்பேட்டை புயல் அபாயம்: முன்னேற்பாடுகளுடன் பேரூராட்சி!


பரங்கிப்பேட்டை: தென்கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புயலாக உருமாறியுள்ள நிலையில், இப்புயல் நாளை மாலை தமிழகத்தின் கடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூர் இடையே கரையை கடக்கும் என்றும், மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக,தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை தொடரும் என்றும்  கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பரங்கிப்பேட்டையின் இன்றைய மழைகால புகைப்படங்கள்



பரங்கிப்பேட்டை, அக் 30: நீலம் புயல்  நாளைசென்னைக்கு தெற்கே மகாபலிபுரம் பகுதியில் கரையைக் கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் முதல் நல்ல மழை பெய்து வருகின்றது. நமது இணையதள நேயர்களுக்காகவும் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரகளுக்காவும் பரங்கிப்பேட்டையின் மழைகாலத்தை புகைப்படம் மூலம் அறியதருகின்றோம்.


























  





நன்றி :tntjpno

பரங்கிப்பேட்டை பள்ளிகளுக்கு விடுமுறை!! நெருங்கும் "நீலம்"புயல் !விடிய விடிய மழை!!


பரங்கிப்பேட்டை: நேற்று மாலை முதல் பரங்கிப்பேட்டையில் பலத்தக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதாக சாமியார்பேட்டை கடற்கரைக்கு சென்று வந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். விடிய விடிய இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் இதனிடையே, பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நாளை நாகைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக கடற்கரையோர பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். கடந்த 25 ஆம் தேதி வங்க கடலில் அந்தமான் நிக்கோபார் தீவிற்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. அது வலுபெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது.


Monday, October 29, 2012

பரங்கிப்பேட்டைவெள்ளாறு கரை புரண்டு ஓடுகிறது


பரங்கிப்பேட்டை: நான்கு நாட்கள் கழித்து மீண்டும் இன்று காலை முதல் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. பரங்கிப்பேட்டையில் இன்று அதிகாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதினால் வெள்ளாறு கரை புரண்டு ஒடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.       புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை பகுதியில் வட்டாச்சியர், துணை ஆட்சித் தலைவர், வருவாய் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. சென்னையில் கடற்சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் 2-வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
சென்னை, கடலூர், நாகை ஆகிய துறைமுகங்களில் ஒண்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி அந்தமான் நீக்கோபார் தீவுகளுக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர காற்றழுத்த பகுதியாக மாறியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.