click me

Saturday, March 30, 2013

ரெயிலில் அனுப்பிய எஸ்.எஸ்.எல்.சி. விடைதாள்கள் சேதம்: மறு தேர்வு நடத்தப்படுமா?


தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தமிழ் 2-ம் தாள் தேர்வு நடந்தது. கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் அரசு பள்ளி மையத்தில் மாணவர்கள் எழுதிய இந்த பரீட்சையின் 545 விடைத்தாள்கள் 3 பண்டல்களாக கட்டப்பட்டது.

பின்னர் இந்த தேர்வு தாள்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சியில் அந்த பண்டலை இறக்கிய போது அதில் 3 கட்டுகள் குறைந்திருந்தன. அவைகளை தேடியபோது விருத்தாசலம் ரெயில் தண்ட வாளத்தில் சிதறி சேதமடைந்து கிடந்தன. இது பற்றி கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

சவுதி அரேபியா லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்


undefinedசவுதி அரேபியா சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதால் அந்நாட்டில் பல்வேறு சிறிய வேலைகளில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் மத்திய புள்ளியியல் மற்றும் தகவல் துறை திரட்டிய விவரத்தில், கடந்த ஆண்டில் மக்கள் தொகையில் 12.2 சதவீதம் பேர், வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இவர்களில் 39 சதவீதத்தினர் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், நிதாகத் என்ற திட்டத்தை சவுதி அரேபிய அரசு தயாரித்துள்ளது.

சென்னையில் ஒரு நாள் படத்திற்கு வரி விலக்கு தர அதிமுக அரசு மறுத்து விட்டதாம்.

சரத்குமார் அவரது மனைவி ராதிகா தயாரித்து, அவர் நடித்துள்ள சென்னையில் ஒரு நாள் படத்திற்கு வரி விலக்கு தர அதிமுக அரசு மறுத்து விட்டதாம்.
சரத்குமார், ராதிகா, சேரன், பிரசன்னா, மல்லிகா என பலரும் நடித்துள்ள படம் சென்னையில் ஒரு நாள். உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுப் படம் இது. நிஜத்தில் நடந்த கதையை அடிப்படையாகக் கொண்ட படம்.
இப்படத்திற்கு வரி விலக்கு கோரியிருந்தனர். அழகான படத் தலைப்பு, அருமையான கதை என சகலமும் சிறப்பாக இருந்தபோதும் கூட வரி விலக்கு இல்லை என்று கூறி விட்டார்களாம்.
இத்தனைக்கும் ஆட்சி அதிமுகதான், முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர்தான் சரத்குமார், அதிமுகவின் இரட்டை இலையில் நின்றுதான் அவர் எம்.எல்.ஏவே ஆனார். ஆனாலும் படத்துக்கு வரிவிலக்கு இல்லை என்று கூறியிருப்பதுதான் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
ஆனால் இந்த மறுப்புக்குக் காரணம் சன் டிவிதான். அதாவது சன் டிவியின் நல்லாசியுடன் என்று இப்படத்திற்கு விளம்பரம் செய்து வருவதுதான் மேலிடக் கண்களை உறுத்தி, வரி விலக்கு வேண்டாம் என்று கூறும் அளவுக்குப் போய் விட்டதாக சொல்கிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம்,

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில், ஆரணி பாராளுமன்ற தொகுதி தேர்தல் குறித்த பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணைபொதுச் செயலாளர் எதிரொலி மணியன் தலைமை தாங்கினார்.
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டு 10 இடங்களை பிடிப்போம். 17 முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். அப்பா அம்மா பார்த்து நடத்தும் திருமணத்தை ஏற்கவேண்டும்.

காதலுக்கும், கலப்பு திருமணத்திற்கும் நாங்கள் எதிரி அல்ல. பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம், தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை கொள்கை இல்லாத கட்சிகள் ஆனால்  பா.ம.க. கொள்கை உள்ள கட்சி என அவர் கூறினார்.

மாநில தலைவர் ஜி.கே.மணி, கணேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூன்றாவது அணியைச் சேர்ந்தவர்தான் பிரதமராகத் தெரிவு செய்யப்படுவார்.:முலாயம் சிங்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் தெரிவித்தார்.
சமீப நாள்களாக மத்திய அரசுக்கு எதிராக முலாயம் சிங் கடுமையான கருத்துகளைக் கூறி வந்ததையடுத்து அவர் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், எனினும் மத்திய அரசு தனது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னெளவில் முலாயம் சிங், மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 8 முதல் 9 மாதங்களே இருக்கும் நிலையில் எதற்காக ஆதரவை வாபஸ் பெற்று ஆட்சியை கவிழ்க்க வேண்டும்? என்று கேட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பாஜகவின் நரேந்திர மோடி முதல்வராக உள்ள குஜராத்துடன் ஒப்பிட்டு முலாயம் சிங் பேசினார்.

போர் தொடங்கிவிட்டதாக வடகொரியா அறிவித்திருப்பதை ஏற்க முடியாது என தென்கொரியா கூறியுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளுளாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நிலவி வரும் சூழலில், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே, எல்லைப் பகுதியில் வடகொரியா படைகளை குவிக்க தொடங்கியது. இதனையடுத்து, அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகளும் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.
இந்த நிலையில், போர் தொடங்கிவிட்டதாக வடகொரியா நேற்று அறிவித்தது. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என கூறியுள்ள தென்கொரியா, இதுபோன்ற தொடர் அச்சுறுத்தல்களை ஏற்க முடியாது என வடகொரியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
undefined
undefined
undefined

Thursday, March 21, 2013

சிதம்பரத்தில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை

சிதம்பரம், மார்ச்.20-

சிதம்பரம் மேம்பாலத்தில் கீழே நேற்று இரவு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பச்சை கலரில் டீ சர்ட்டும், வெள்ளை கலரில் கட்டம்போட்ட சட்டை மற்றும் கட்டம்போட்ட கைலி அணிந்திருந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து புரூனியோ மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது.

கடலூரில் பிளாஸ்டிக்கை ஒழிக்க தீவிர நடவடிக்கை

கடலூர் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாறுபட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திட்டக்குழு தலைவரும், ஊராட்சி குழு தலைவருமான மல்லிகா வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.

மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், திட்டக்குழு அலுவலர் ஆனந்தன், ஒன்றிய குழு தலைவர்கள் மணிமேகலை பழனிசாமி, ஜெயபால், மணிகண்டன், சுந்தர்ராஜன், செல்வராஜ், சுந்தரிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முருகுமாறன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

உலகின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி நிலையம் அபுதாபியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


ஷாம்ஸ் 1 எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மொத்த முதலீடு 600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதன்மூலம் 100 மெகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுமென்றும் சுமார் 20 ஆயிரம் வீடுகள் பயனடையுமென தெரிவிக்கப்படுகின்றது. இதனை நிர்மாணிக்க சுமார் 3 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. மேலும் சுமார் 258,000 கண்ணாட்டிகள் இதற்காக பொருத்தப்பட்டுள்ளன.
இம் மின்சக்தி நிலையத்தின் மொத்த பரப்பளவு 2.5 சதுர கிலோமீற்றகளாகும், இது 285 உதைப்பந்தாட்ட மைதானங்களுக்கு சமனாகும்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியனான ஷேக் கலீபா பின் சயீட் பின் சுல்தான் அல் நயான் இதனை ஆரம்பித்து வைத்தார்.
undefined
undefined
undefined
undefined
undefined