கடந்த 60 ஆண்டுகளுளாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நிலவி வரும் சூழலில், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே, எல்லைப் பகுதியில் வடகொரியா படைகளை குவிக்க தொடங்கியது. இதனையடுத்து, அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகளும் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.
இந்த நிலையில், போர் தொடங்கிவிட்டதாக வடகொரியா நேற்று அறிவித்தது. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என கூறியுள்ள தென்கொரியா, இதுபோன்ற தொடர் அச்சுறுத்தல்களை ஏற்க முடியாது என வடகொரியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.



No comments:
Post a Comment