click me

Wednesday, October 17, 2012

சவூதி அரேபியாவில் சவூதி பெண்கள் இனி நீதிமன்றங்களில் வாதாட அனுமதி

சவூதி அரேபியாவில் உள்ள நீதிமன்றங்களில் அந்நாட்டின் பெண் சட்டத்தரனிகள் வாதாட அனுமதியளிக்கப்பட உள்ளது.
சவூதி அரேபியா சட்டப்படி அந்நாட்டு பெண்கள் பொது இடங்களில் ஆண் துணையின்றி சுற்றுவது, கார் ஓட்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்ய தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் ஈத்-அல்-அதா என்ற மாநாட்டில் பெண் சட்டத்தரனிகள் நீதிமன்றங்களில் வாதாட அனுமதியளிக்க வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதையடுத்து அடுத்த மாதம் முதல் பெண் சட்டத்தரனிகள் நீதிமன்றங்களில் வாதாட அனுமதிக்கப்படுவர் என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே நான்கு வருடம் சட்டம் படித்து நான்கு ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே வாதாட முடியுமென சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம்

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா விமான நிலையம் தான் தற்போது உலகிலேயே மிக பெரியதாக உள்ளது.
இங்கு ஆண்டுக்கு 8 கோடியே 90 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக பீஜிங் மற்றும் லண்டன் ஹுத்ரு விமான நிலையங்கள் திகழ்கின்றன.
சீன தலைநகர் பீஜிங்கில் சர்வதேச விமான நிலையத்தில் ஆண்டுக்கு 7 கோடியே 50 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இங்கு புறநகரில் மற்றொரு விமான நிலையம் கட்டப்பட உள்ளது. இது 55 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு உடையதாக இருக்கும்.
இங்கு ஆண்டொன்றுக்கு 13 கோடி பேர் வந்து செல்ல முடியும். இதற்கு “பீஜிங் டாசிங் சர்வதேச விமான நிலையம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் கட்டுமான திட்டத்தை நெதர்லாந்து விமான நிலைய ஆலோசனை நிலையமான ‘நாகோ’ தயாரித்துள்ளது.
இந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் போது, உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் என்ற அந்தஸ்தை பெறும். இதை வருகிற 2017ம் ஆண்டில் திறக்க சீனா திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
கிழக்கு இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுலவேசி மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் லேசாக குலுங்கின. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சேத நிலவரங்கள் குறித்தும் தகவல் வெளியாகவில்லை

தமிழக மின்நிலைமையை சீராக்க ஜப்பான் ரூ 3.5 ஆயிரம் கோடி கடனாக வழங்க முன்வந்திருக்கிறது.


சென்னை: தமிழகத்தில் மின்நிலைமையை சீராக்க ஜப்பான் நாடு ரூ3,572 கோடியே 73 லட்சம் கடனாக வழங்க முன்வந்திருக்கிறது.
ஜப்பானைப் பொறுத்தவரையில் இந்தியாவில் 4 திட்டங்களை நிறைவேற்ற மொத்தம் ரூ7,802 கோடியே 17 லட்சம் கடன் வழங்கப்படும் என்று ஜப்பான் கூறியுள்ளது. இதில் ஒன்றுதான் தமிழகத்துக்கான மின்நிலைமையை சீராக்குவதற்கான நிதியும்.
ஜப்பான் கடனுதவியால் பயன் என்ன?
ஜப்பான் கடனுதவியின் மூலமாக வரும் 2017-ம் ஆண்டுக்குள் 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு உற்பத்தி செய்ய முடியும். தமிழக மின்சார வாரியம் புதிய மின் திட்டங்களை செயல்படுத்த இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளும்.
மாநிலம் முழுவதுமே ஒரே சீரான மின் விநியோகத்துக்காக அனைத்து துணை மின்நிலையங்கள், மின்பகிர்மான இணைப்புகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கும் இந்த நிதி பயன்படும்.
ஜப்பானின் ஆர்வம் ஏன்?

சிதம்பரம் அருகே கிள்ளை போலீஸ் ஏட்டை கொலை செய்ய முயன்ற 3 பேர் கோர்ட்டில் சரண்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ராஜா. இவர் சிதம்பரம் வண்டிகேட் உமாபதி நகரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஆட்டோவில் சந்தேகப்படும்படியாக இருந்த 3 பேரை ஏட்டு ராஜா விசாரித்தார். அதற்கு அவர்கள் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். உடனே தனது செல்போனில் அவர்கள் 3 பேரையும் படம் பிடித்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த அவரை சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து கிள்ளை போலீசார் வழக்குபதிவு செய்து ஏட்டு ராஜாவை தாக்கியவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த, சிதம்பரத்தை சேர்ந்த ராம் (30), சுரேஷ் (25), சீர்காழியை சேர்ந்த கார்த்திகேயன் (30) ஆகியோர் நேற்று விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் சரண் அடைந்தனர்.

இவர்கள் 3 பேரையும் காவலில் வைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். அதன் பேரில் 3 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பரங்கி பேட்டை இல் நேற்று இரவு லேசான முதல் மிதமான மழை

பரங்கி பேட்டை இல் நேற்று இரவு முதல் லேசான முதல் மிதமான மழை பெய்துள்ளது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றியுள்ளதாக, வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. 

First day of Eid Al Adha announced

Bakrid - Eid al-Adha - 2012 Dates
Dubai:  The Supreme Court of Saudi Arabia has announced that Friday, October 26, will be the first day of Eid Al Adha. Tuesday was the 30th day of Dhu Al Qa’da and Wednesday is the first day of Dhu Al Hijja, the court said in a statement.
The Supreme Court said that Thursday, October 25, will be Arafat Waqfa Day, and Friday, October 26 will be the first day of Eid Al Adha.
“The new moon of Dhu Al Hijja was not sighted on Monday by two trusted witnesses, and thus Tuesday is the 30th day of Dhu Al Qa’da, and Wednesday, October 17, will mark the beginning of the lunar month of Dhu  Al Hijja,” the statement said.