இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த அவரை சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து கிள்ளை போலீசார் வழக்குபதிவு செய்து ஏட்டு ராஜாவை தாக்கியவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த, சிதம்பரத்தை சேர்ந்த ராம் (30), சுரேஷ் (25), சீர்காழியை சேர்ந்த கார்த்திகேயன் (30) ஆகியோர் நேற்று விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் சரண் அடைந்தனர்.
இவர்கள் 3 பேரையும் காவலில் வைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். அதன் பேரில் 3 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment