
உலக பட்டினி சுட்டெண் என்ற இந்த அறிக்கை பலமான பொருளாதார வளர்ச்சி, ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் உணவுப் பற்றாக்குறையை மற்றும் குறைக்கவும் போஷாக்கின்மையை குறைக்கவும் உதவியிருந்தாலும், எரித்திரியா மற்றும் புருண்டி போன்ற நாடுகளில் இன்னும் கவலையளிக்கும் அளவுக்கு பட்டினி நிலவுவதாகக் கூறுகிறது.
பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ந்திருந்தாலும்,
பட்டினியை சமாளிப்பதில் இந்தியாவின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் வருமானம் சமமின்றி இருப்பது, மற்றும் பெண்கள் இன்னும் கீழ் நிலையில் இருப்பதை அது இதற்குக் காரணமாகக் கூறுகிறது.
No comments:
Post a Comment