click me

Monday, October 22, 2012

கிங்பிஷர் உரிமத்தை ரத்து செய்தது விமான இயக்குனரகம்

பொது விமான போக்குவரத்து இயக்குனரகம் (Directorate General of Civil Aviation) கிங்பிஷர் விமான நிறுவனத்தின் உரிமத்தை இன்று ரத்து செய்துள்ளது.
கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லைய்யா நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், விமான நிறுவனத்தின் நிலையை சீராக்க மேலும் கால அவகாசம் கோர விஜய் மல்லைய்யா முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்வதற்கு முன் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பொது விமான போக்குவரத்து இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
கிங் பிஷர் விமான நிறுவனத்திற்கு ஏற்பட்ட ரூ. 7524 கோடி கடன் மற்றும் நிதி நெருக்கடியே இந்த அவல நிலைக்கு காரணமாகும்.
இரண்டாம் இணைப்பு:
இதன்படி விமான போக்குவரத்து இயக்குனரகம் கிங்பிஷருக்கு அனுப்பிய நோட்டீசுக்கு தக்க பதிலளிக்கதாக காரணத்தினால் கிங்பிஷரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment