click me

Thursday, December 6, 2012

டிசம்பர் 6 ஆம் தேதியை முன்னிட்டு, த.மு.மு.க.வின் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நினைவு நாளான டிசம்பர் 6 ஆம் தேதியை முன்னிட்டு,பாபர் மஸ்ஜித் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவும் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமுமுக கடலூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் தமுமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சவுக்கத் அலி கான் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக இன்று காலை 9 மணியளவில், பரங்கிப்பேட்டை நகர த.மு.மு.க. கிளை சார்பில் 10 இரண்டு சக்கர வாகனங்கள உட்பட 23 வாகனங்களில் நகர தலைவர் ஹசன் அலி தலைமையில்  அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர்.
தமுமுக ஊழியர் கொள்ளுமேடு ரிஃபாயி இறைமறை வசனங்களை ஓதினார். தமுமுக மாவட்ட செயலாளர் என் அமானுல்லா வரவேற்புரையாற்றினார். தமுமுக மாவட்ட பொருளாலர் ஏ.எம்.அய்யுப் மமக முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.யாசிர் அரஃபாத் உள்ளிட்ட மாவட்ட தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

மர்ஹூம் செய்தி

ஹக்கா சாஹிப் தர்கா தெருவில் மர்ஹூம் ஷேக் அப்துல் காதர் அவர்களின் மகனாரும்,ஓமர் அலி நகுதா அவர்களின் சகோதரரும், ஹசன் பாரூக், ஹுமாயூன் கபீர் இவர்களின் தந்தையுமாகிய முஹம்மது கவுஸ் மரைக்காயர் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்.

Sunday, December 2, 2012

Shaikh Mohammed bin Rashid Al Maktoum greets nation through SMS

His Highness Shaikh Mohammed bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai, greeted the citizens and residents on the 41st National Day of the country over a SMS forwarded to most of the mobile phone subscribers on Saturday morning.
The SMS read: “Dear citizens and residents of the UAE, I am delighted to congratulate you and my brother Shaikh Khalifa, President of the UAE, as we all celebrate the 41st anniversary of the UAE. This is a day of joy and pride, in which we remember the inspiring journey  of our founding fathers and look ahead towards a bright future of endless possibilities.”
In similar words, he told Dirra Al Watan magazine that the UAE had succeeded because it’s a sole patriotic model made excellently in the UAE which had not emulated any earlier model.
Arab and world news websites quoted the SMS referring to it as ‘the first SMS sent by an Arab leader to his people’. Local telecommunication providers Etisalat and du sent Shaikh Mohammed’s message to all their subscribers’ cell phones. Reacting on the cordial message, Emirati citizens and residents in the country shared posts in Facebook and Twitter, deeming the message as an ‘invaluable’ gesture made by a leader to his people- a leader who bears in mind two goals; the nation and the people.

Holy Kaaba washed

Makkah Gov. Prince Khaled Al-Faisal ceremoniously washing the Kaaba its interior on Thursday and President of the Two Holy Mosques Affairs Sheikh Abdul Rahman Al-Sudais and his deputy Muhammad Al-Khozaim, prominent Islamic scholars and diplomats of Muslim countries attended the ritual. The interior of the Kaaba is washed twice a year — in Muharram and Shaaban.


துபாய் :மழை கால படங்கள் (30.11.2012)


பாலஸ்தீனர்களுக்கு ஐநா சபையில் non-member observer state,


பாலஸ்தீனர்கள் கொண்டாட்டம்ஐநா சபையில் non-member observer state,அதாவது 'உறுப்புரிமை அற்ற பார்வையாளர்' என்ற அந்தஸ்து கிடைத்துள்ளதை பாலஸ்தீனியர்கள் கொண்டாடுகிறார்கள்.
மேற்குகரையில் ரமல்லா நகரிலுள்ள யாசீர் அரபாத் சதுக்கத்தில் பாரம்பரிய இசைமுழங்க, பாரம்பரிய நடனங்களை ஆடியபடி,மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
காசா நகரிலும் மக்கள் வீதிகளில் ஆடிப்பாடி, வாகனங்களின் ஹோர்ன்களை ஒலியெழுப்பியும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
சர்வதேச அரங்கில் பாலஸ்தீனத்தின் அந்தஸ்தை இன்னுமொருபடி மேலே உயர்த்துகின்ற தீர்மானத்துக்கு ஐநாவின் பொதுச்சபை சாதகமாக வாக்களித்திருக்கிறது.
பாலஸ்தீனத்தை உறுப்பினர் அல்லாத பார்வையாளர் என்று அறிவிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்,ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேஸில் உள்ளிட்ட 138 நாடுகள் வாக்களித்தன.
இஸ்ரேலும் அமெரிக்காவும் அடங்கலாக 9 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட 41 நாடுகள் வாக்களிப்பில் பங்கெடுக்காமல் ஒதுங்கிக்கொண்டன.

ரிக்கி பாண்டிங் ஒய்வு பெற்றார்


ரிக்கி பாண்டிங்ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெர்த் டெஸ்ட் போட்டியே அவர் கடைசியாக பங்கேற்கும் போட்டியாக இருக்கும்.
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சச்சின் டெண்டூல்கருக்கு அடுத்து அதிக ரன்களைக் குவித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான 37 வயதான பாண்டிங் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே மோசமாக விளையாடி வருகிறார்.