click me

Monday, December 31, 2012

HAPPY NEW YEAR 2013


இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கு புதிய செயலாளர்


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்-தின் புதிய செயலாளராக ஜுன்னத்மியான் தெருவில் வசிக்கும் G.முஹம்மது மீரான் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமனத்தை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் S.நூர் முஹம்மது செய்திருக்கிறார்.

புதிய செயலாளர் G.முஹம்மது மீரானுக்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்தில் , தலைவர் டாக்டர் S.நூர் முஹம்மது  பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் M.S.அலி அக்பர், பொதுச்செயலாளர் O.முஹம்மது கவுஸ், செயலாளர் M.சுல்தான் அப்துல் காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
தகவல் & படம்: இ.ஐ.ஜ

Saturday, December 29, 2012

நீதி என்பது நிறம் பார்த்தா? மதம் பார்த்தா? வாழுமிடம் பார்த்தா?


undefinedடெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 23 வயது மாணவி, சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.  அன்று அவர்கள் பேசியது..............




  • லோக்சபாவில் ஆக்ரோசமாக பேசிய பா.ஜ.க எதிர்த் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது. மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக் கூடாது என்று மிகவும் வேதனையுடன் கூறியதாகவும்,

சிதம்பரத்தில் தமிழ் இணைய மாநாடு: ஆய்வறிஞர்கள் பங்கேற்பு


தமிழ்மொழியை வளர்க்க அதை மற்றவர்களும் அறிந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
1வது உலகத்தமிழ் இணைய மாநாடு தொடக்கவிழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக குமாரராஜா முத்தையா அரங்கில் நடைபெற்றது. மொழியியல் உயர் ஆய்வு மையம், உலகத்தமிழ் தொழில் மன்றம் மற்றும் கணினி தமிழ்ச்சங்கம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
இந்தியா மட்டுமல்லாமல், இங்கிலந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மொழியியல் வல்லுநர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து தமிழ் மென்பொருள் கண்காட்சி கூடம் திறந்து வைக்கப்பட்டது. தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்கியுள்ள 3 பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மாநாட்டில் கருத்தரங்கு மட்டுமல்லாமல் அதை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக கண்காட்சி, மக்கள் அரங்கம் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி,சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணமடைந்தார்.


undefinedடெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 23 வயது மாணவி, சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.மாணவியின் மரணம் தங்களை சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாக டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா கரத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இணையத்தின் எதிர்கால ஆளுமை யார் கையில்?"


துபாயில் துவங்கியிருக்கும் இணையம் தொடர்பான ஐநா மன்றத்தின் மாநாட்டில் 193 நாடுகளைச் சேர்ந்த இணையதொழில்நுட்ப அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஐநா மாநாடு, உலக அளவில் இணையத்தின் செயற்பாடுகள் குறித்தும், அதன் நிர்வாகம் குறித்தும் விவாதிக்க இருக்கிறது.
இந்த மாநாட்டின் கருப்பொருள் இணையமேலாண்மை என்பதாக இருந்தாலும் இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து கடும் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது.

வட இலங்கை வெள்ளத்தில் ஏராளமானோருக்கு பாதிப்பு


இலங்கையின் வடக்கே வன்னிபிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு வரையில் இரண்டு தினங்களாகப் பெய்த கடும் மழை காரணமாக யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் இருக்க முடியாமல் வெள்ளம் புகுந்ததனால், 23, 000 பேர் 125 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
மன்னாருக்கான பிரதான வீதி, முள்ளியவளையில் இருந்து முல்லைத்தீவு நகருக்குச் செல்லும் பிரதான வீதி, ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்புக்குச் செல்லும் வீதி என்பன வெள்ளத்தினால் மூழ்கியிருப்பதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.