click me

Saturday, December 29, 2012

சிதம்பரத்தில் தமிழ் இணைய மாநாடு: ஆய்வறிஞர்கள் பங்கேற்பு


தமிழ்மொழியை வளர்க்க அதை மற்றவர்களும் அறிந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
1வது உலகத்தமிழ் இணைய மாநாடு தொடக்கவிழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக குமாரராஜா முத்தையா அரங்கில் நடைபெற்றது. மொழியியல் உயர் ஆய்வு மையம், உலகத்தமிழ் தொழில் மன்றம் மற்றும் கணினி தமிழ்ச்சங்கம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
இந்தியா மட்டுமல்லாமல், இங்கிலந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மொழியியல் வல்லுநர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து தமிழ் மென்பொருள் கண்காட்சி கூடம் திறந்து வைக்கப்பட்டது. தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்கியுள்ள 3 பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மாநாட்டில் கருத்தரங்கு மட்டுமல்லாமல் அதை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக கண்காட்சி, மக்கள் அரங்கம் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment