click me

Sunday, December 16, 2012

வருகிற 21ஆம் திகதியுடன் உலகம் அழியப் போகிறதா

வருகிற 21ஆம் திகதியுடன் உலகம் அழியப் போகிறது என ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்த சிலரை சீன பொலிசார் கைது செய்துள்ளனர்.
மாயன் காலண்டர் படி, வருகிற 21ஆம் திகதி உலகம் அழியப் போகிறது என நம்பும் சீனர்கள் ஒண்றிணைந்து பல ஊர்களில் கூட்டம் நடத்துவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இவர்கள் சீனாவின் மத்திய பகுதிகளிலும், மேற்கு மாகாணங்களிலும் பல இடங்களில் இவ்வாறு கூட்டம் நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் பொய்யான செய்திகளை பரப்புவதாக கூறி, இவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த விடயம் சீனாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment