click me

Saturday, December 1, 2012

பாலஸ்தீனத்திற்கு எதிராக 3000 வீடுகளை கட்டுகிறது இஸ்ரேல்

ஐ.நா சபையில் பாலஸ்தீனத்திற்கு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக 3 ஆயிரம் வீடுகளை கட்ட இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது.
ஐ.நா சபையில் பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு 193 நாடுகள் ஆதரவு அளித்தும், 9 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவையை நேற்று கூட்டி இது தொடர்பாக விவாதித்தார்.
அப்போது, பாலஸ்தீனத்திற்கு சொந்தமான தற்போது இஸ்ரேல் வசம் உள்ள மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் புதிய குடியிருப்புகளை கட்டுவது என முடிவெடுக்கப்பட்டது.

அப்பகுதியில் யூதர்களை பெருமளவில் வசிக்க வைப்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேலின் இந்த முயற்சிக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளிவிவகாரத்துறை செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் கூறுகையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை வருங்காலத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைக்கும், சுமூக முடிவுக்கு எதிரானதாகும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment