click me

Friday, December 28, 2012

கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்


காற்றழுத்த தாழ்வு நிலை நகர்கிறது: கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்வங்க கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 1 வாரத்துக்கு முன்பு உருவானது. தமிழக கடலோர மாவட்டம் வரை மேகமூட்டம் பரவி நிற்பதால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 
தென்மேற்கு வங்க கடலில் இலங்கையை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து வருவதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் இடியுடன் கனமழையும் பெய்கிறது.
 
தென் மாவட்டங்களின் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பரவலாக பெய்கிறது. இந்த மழை நாளையும் நீடிக்கும். தரைக்காற்றும் அவ்வப்போது பலமாக வீசும்.
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யும்.
 
இவ்வாறு வானிலை மைய அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment