
சவுதியில் சூடானை சேர்ந்த முகமது என்பவர், தங்கி வேலை பார்த்து வந்தார்.
முகமதுக்கும், சக நாட்டுக்காரரான சாலா அகமதுக்கும் இடையில் பிரச்னை உருவானது. இதனையடுத்து அவரை தலையிலேயே அடித்து கொன்றுள்ளார்.
இந்த கொலை குற்றத்திற்காக முகமதுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து மெக்கா நகரின் மேற்கு பகுதியில் பொது இடத்தில் வைத்து முகமதுவின் தலையை வெட்டி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதே போன்று கடந்தாண்டு மட்டும் 89 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment