click me

Thursday, December 6, 2012

பிலிப்பைன்ஸில் சூறாவளி: சாவு எண்ணிக்கை 475


பிலிப்பைன்ஸில் சூறாவளி: சாவு எண்ணிக்கை 475 ஆக அதிகரிப்புபிலிப்பின்ஸில் ஏற்பட்டுள்ள போஃபா புயலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 475 ஆக அதிகரித்துள்ளது.
போஃபா புயலினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு அரசு பிற நாடுகளின் உதவியை நாடி வருகிறது. இந்த வருடத்தின் மிக மோசமான புயலாக கருதப்படும் போஃபா புயல் கடந்த செவ்வாய்க்கிழமை மின்டானாவ் தீவை கடக்கும் போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை ஏற்பட்டது.
இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில் சேற்றில் சிக்கியும், மரங்கள் விழுந்தும், வீடுகள் இடிந்தும் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் புயலின் போது காணாமல் போன 377 பேரை தேடி வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment