click me

Monday, November 26, 2012

பங்களாதேஷ் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து: 120 பேர் பலி(படங்கள்)

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே உள்ளே ஜவுளி தொழிற்சாலையொன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தீயில் கருகி பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை சிலர் கட்டிடத்தில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு கீழே குதித்துள்ளதனாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த ஜவுளி ஆலை கட்டிடமானது 9 மாடிகளைக் கொண்டதெனவும் இதில் நூற்றுக்கணக்கானோர் தொழில் புரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்பு பணியும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பங்களாதேஷிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment