click me

Sunday, November 4, 2012

ஐரீன் காத்ரினா, சாண்டி,மிகப்பெரிய புயல்களும் அமெரிக்கா கண்டும் காணாத உண்மைகளும்!

இத்தனையாண்டுகாலம் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய புயல்கள் உருவாகி வருவதற்குக் காரணம் புவி வெப்பமடைதலே அல்லது குளோபல் வார்மிங்கினால் ஏற்படும் வானிலை மற்றம், கடல்நீர் மாற்றம் ஆகியவையே என்று விஞ்ஞானிகள் சுமார் 30 ஆண்டுகாலமாக கதறி வருகின்றனர். ஆனால் அமெரிக்காவிலும் சரி எந்த நாட்டிலும் சரி எந்த அரசியல்கட்சிகளும் விஞ்ஞானிகளின் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

2005ஆம் ஆண்டு அமெரிக்காவை புரட்டிப் போட்ட காத்ரீனாவாகட்டும் அல்லது ஐரீனாகட்டும் தற்போது மிக முக்கிய நகரங்களை நிலைகுலையச் செய்து அமெரிக்காவே காணாத வரலாறு காணாத சேதங்களை ஏற்படுத்திய சாண்டி புயலாகட்டும் அனைத்தும் புவிவெப்பமடைதல் என்ற மனித நடவடிக்கையின் விளைவுகளே என்பதை யாரும் ஒப்புக் கொள்வதைல்லை. கண்டும் காணாதது போல் இருக்கப் பழகிவிட்டோம்.


நுரையீரல் புற்று நோய்க்கு புகைப்பிடிப்பது எப்படி அமைப்பு ரீதியான காரணமோ அப்படித்தான் மிகப்பெரிய புயல்களுக்குக் காரணம் புவிவெப்பமடைதலே. இது மானுட உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்படுவதே.

புவி வெப்பமடைதலால் மெக்சிகோ வளைகுடா மற்றும் அட்லாண்டிக் கடல் நீரை உஷ்ணப்படுத்தியுள்ளது. இதனால் காற்றில் நீராவியின் அளவும் சக்தியும் அதிகரிக்கிறது. இது ஏற்பட்டுவிட்ட நிலையில் ஈரமான ராட்சத புயற்காற்றுகள் தவிர்க்க முடியாதவையாகி விடுகிறது. இந்த சிஸ்டமிக் காரணங்கள்தான் சாதாரண புயல் சாண்டி, ஐரீன், காத்ரினா அளவுக்கு ராட்சத புயலாக மாறுவதற்குக் காரணம்.

புவிவெப்பமடைதலால் ஒவ்வொரு நாளும் உருவாகும் கூடுதல் சக்தி 4 லட்சம் ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்கு சமமானது என்றே விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர். பூமி என்ற நம் கணக்கிடமுடியாத இந்தப் பரப்பளவு மற்றும் ஆழத்தில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை நம் உடல் நேரடியாக உணர வாய்ப்பில்லை.

பனிப்பாறைகள் புவி வெப்பமடைதலால் உருகும்போது கடல் நீர் மட்டம் 45 அடி உயரும். இதனால் அதிக உஷ்ண நீர் பரப்பளவு அளவில் கடல் பரப்பில் சேரும்போது சாதாரண புயல்கள் கூட ராட்சத புயலாக உருமாறுகிறது.

2டிகிரி செல்சியஸ் பூமி அதிகம் வெப்பமடைந்தால் கூட போதுமானது இந்த மனித குலத்திற்கே இது பேரழிவாகப் போய் முடியும். 2 டிகிரி செல்சியஸ் என்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. எக்சான் எண்ணெய் நிறுவனம் அமெரிக்காவில் தோண்டும் கச்சா எண்ணெயின் அளவு போதுமானது. அந்த கச்சா எண்ணெய் பெட்ரோலாக மாறி எரிக்கப்படும்போது 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் அவ்வளவுதான்!

இது வெறும் எக்சான் மொபில் நிறுவன எண்ணெய் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் சேமித்து வைத்துள்ள எண்ணெய் எரிக்கபடும்போது இந்த பூமியின் வெப்ப நிலை என்னவாக இருக்கும் என்பதை யோசிக்க முடியுமா என்றே தெரியவில்லை.

No comments:

Post a Comment