
கடலூர், நவ, 13:கடலூரில் ”தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான” ”கடலூர் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி” கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் கடந்த 11-ம் தேதி நடைப்பெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இதில் பரங்கிப்பேட்டை "BMD" அணியினரும் கலந்து கொண்டு விளையாடி முதல் பரிசை ரூபாய்.10,000/- தட்டி வந்துயிருகின்றனர்.
இந்த வெற்றியானது கடந்த 15-ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு பெற்ற வெற்றி என்பதால் மிகுந்த மகழிச்சியில் உள்ளனர் "BMD" அணியினர்.
பூப்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சிறப்புமிக்கது பரங்கிப்பேட்டை என்பதை மீண்டும் நிருபித்துள்ளனர் "பரங்கிப்பேட்டை BMD" அணியினர்.
No comments:
Post a Comment