
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவை கண்டித்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எல். தத்து மற்றும் சி.கே. பிரசாத் கூறுகையில்,
மாநிலத்தில் உயரிய பதவியில் இருந்துள்ளீர்கள். ஆளுநருக்கு அடுத்த படியான பதவியை வகித்துள்ளீர்கள். ஒரு கட்சியை நடித்துகிறீர்கள். அப்படி இருக்கையில் எப்படி இவ்வாறு செய்யலாம்? என்று கேட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment