click me

Saturday, November 3, 2012

கடலூர் மாவட்ட அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு லேப்டாப்

 கடலூர் மாவட்ட அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு லேப்டாப்கடலூர் மாவட்ட அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

முதல்வர் ஜெயலலிதா அறிவித்தப்படி தமிழக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இலவச லேப்டாப்க்களை, அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடலூர் மாவட்ட எம்.எல்.ஏக்களான ரா.ராஜேந்திரன், எம்.பி.எஸ்.சிவசுபரமணியன், செல்வி ராமஜெயம், பாலகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் எம்.பி.சம்பத் ஆகியோருக்கு இன்று லேப்டாப் வழங்கப்பட்டது. இதை கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேமுதிக எம்.எல்.ஏக்கள் மூன்று பேரி இந்த நிகழ்ச்சியை புறக்கணித்திவிட்டார்கள். 

No comments:

Post a Comment