click me

Wednesday, November 7, 2012

6 கியாஸ் சிலிண்டர்களுக்கு வங்கி மூலம் ரூ. 3000 மானியம்: மத்திய அரசு முடிவு

6 கியாஸ் சிலிண்டர்களுக்கு வங்கி மூலம் ரூ. 3000 மானியம்: மத்திய அரசு முடிவுஆண்டுக்கு 6 மானிய சிலிண்டர்கள் என்ற தற்போதைய கட்டுப்பாட்டின்படி ஒரு நுகர்வோருக்கு ஆண்டுதோறும் 3 ஆயிரம் ரூபாய் மானியமாக வங்கி கணக்கில் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒருவேளை, 9 சிலிண்டர்கள் வழங்கப்பட்டால் ஆண்டுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க மானியம் வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, கியாஸ் இணைப்பு உள்ளவர்கள் பெயரில் உடனடியாக வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மானிய விலையில் இனி கியாஸ் சிலிண்டர்களைப் பெற வங்கி கணக்கு அவசியம் என்று மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. வங்கி கணக்கு, அல்லது ஆதார் அடையாள அட்டைகளின் மூலம் நுகர்வோருக்கு அரசு வழங்கும் சமையல் சிலிண்டர் மானியம், இனி நேராக வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மத்திய அரசு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment