பரங்கிப்பேட்டை, நவ 26: பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி ஜெயின் பாவா தைக்கால் பகுதியை சேர்ந்த கோழிக்கடை முஸ்தபா அவருடைய குடிசை வீடு (மிட்டாய் நானா வீடு) நேற்று நள்ளிரவு சுமார் 2.00 மணியளவில் தீபிடித்து எரிந்தது. இதயனையறிந்த அக்பக்கதினர், தீயனைப்பு துறையினரரும் சேர்ந்து தீயைனைந்தனர்.
இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் அவருடைய மகளின் பிரசவத்திற்க்காக தண்டல் (வட்டிக்கு) மூலம் வாங்கி வைதிருந்த ரூபாய்.9,000/- பணம் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்யடைந்துயுள்ளன. தற்போது உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.
தீவிபத்திற்க்கான காரணம் இதுவரை காரணம் தெரியவில்லை பரங்கிப்பேட்டை பேலீசார் வழக்கு பதிந்து விசராணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment