click me

Wednesday, October 31, 2012

நிலம் புயல் மகாபலிபுரம் அருகே கடந்துக்கொன்டிருக்கின்றது


NILAM 



சென்னை: வங்கக்கடலில் உருவான நீலம் புயல் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில், தென் கிழக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. சென்னைக்கு அருகில், 550 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுவடைந்து, அதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது; நேற்று காலை, அது புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "நீலம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு தெற்கே, 500 கி.மீ., மற்றும் இலங்கையின் திரிகோணமலைக்கு வட கிழக்கில், 100 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நீலம் புயல் சென்னைக்கு தெற்கே மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மகாபலிபுரம் மற்றும் கல்பாக்கம் ஆகிய இடங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், மிகப்பெரிய அளவில் அலைகள் எழும்புகின்றன.

சென்னை, கடலூரை நெருங்கிவிட்டது நிலம் புயல்!


சென்னை: நிலம் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ தொலைவிலும் கடலூருக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது.
 Nilam Moves Closer Chennai Coast வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது. நேற்று இரவு முதல் இது வேகமாக நகர்ந்து இன்று காலை சென்னைக்கு தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது இது சென்னைக்கு தென்கிழக்கில் 180 கிலோ மீட்டர் தொலைவிலும் கடலூருக்கு தென்கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும் நெருங்கி வருகிறது.
இன்னும் ஓரிரு மணிநேரத்தில் சென்னை அருகே புயல் கரையைக் கடைக்க இருக்கிறது

8-ம் எண் புயல் கூண்டு
சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதையும் சீறிவரும் கடலலைகள் ஆக்கிரமித்திருக்கிறது. சென்னை துறைமுகத்தில் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்பதுடன் சென்னை துறைமுகத்துக்கு கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதால் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6-ன் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பரங்கிபேட்டை மழை கால புதியபடங்கள்

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்தக் காற்றழுத்த மண்டலம் தற்போது "நீலம்" புயலாக உருவெடுத்துள்ளது. இதனால் கடந்த 4 நாட்களாக பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.  MYPNO வலைத்தளம் விடாது மழை-புயல் செய்திகளையும் புகைப்படங்களையும் சிரமம் பாராமல் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. 


காஜியார் தெரு
தெத்துக்கடை தெரு
தெத்துக்கடை தெரு
பெரிய மதகு
பக்கிங்காம் - பெரியமதகு
பக்கிங்காம் - நடைப்பாலம்
பக்கிங்காம் - தரைப்பாலம்
வீடு திரும்பும் பவர்பிளாண்ட் பணியாளர்கள் 
சிறியமதபகு - பக்கிங்காம்
பக்கிங்காம் - சாலிகண்டு தைக்கால்
பரங்கிப்பேட்டை -புதுச்சச்திரம் சாலையோரம்
 நீரில் முழ்கியுள்ள நிலம்: பரங்கிப்பேட்டை -புதுச்சச்திரம் சாலை
பரங்கிப்பேட்டை -புதுச்சச்திரம் சாலை: முதியோர் இல்லம் அருகில்
 
பவர் பிளாண்ட் தரைப்பலம் : பரங்கிப்பேட்டை -புதுச்சச்திரம் சாலை
நன்றி :mypno

Tuesday, October 30, 2012

பரங்கிப்பேட்டை புயல் அபாயம்: முன்னேற்பாடுகளுடன் பேரூராட்சி!


பரங்கிப்பேட்டை: தென்கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புயலாக உருமாறியுள்ள நிலையில், இப்புயல் நாளை மாலை தமிழகத்தின் கடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூர் இடையே கரையை கடக்கும் என்றும், மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக,தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை தொடரும் என்றும்  கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வியட்நாம், தென் சீனா ஊடாகவும் இன்னொரு சூறாவளி

வியட்நாம் ஊடாக கரைகடந்துள்ள சூறாவளியொன்று இப்போது தென் சீனாவுக்குள் நகர்ந்துள்ளது.வியட்நாமின் வடக்கு பிராந்தியத்தில் சொன்-டின் என்ற இந்த சூறாவளியின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய இந்த புயலில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. அங்கு வயல் காணிகளும் மின்சார விநியோகக் கட்டமைப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மணிக்கு 140 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசியுள்ள இந்த சொன்- டின் புயலே அந்நாட்டை இந்த ஆண்டில் தாக்கிய மிகப்பெரிய சூறாவளியென்று வியட்நாம் உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
இப்போது மிக வேகத்துடன் தென் சீனாவுக்கு நகர்ந்துள்ள இந்த சூறாவளி கடுமையான புயல்மழையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரங்கிப்பேட்டையின் இன்றைய மழைகால புகைப்படங்கள்



பரங்கிப்பேட்டை, அக் 30: நீலம் புயல்  நாளைசென்னைக்கு தெற்கே மகாபலிபுரம் பகுதியில் கரையைக் கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் முதல் நல்ல மழை பெய்து வருகின்றது. நமது இணையதள நேயர்களுக்காகவும் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரகளுக்காவும் பரங்கிப்பேட்டையின் மழைகாலத்தை புகைப்படம் மூலம் அறியதருகின்றோம்.


























  





நன்றி :tntjpno

கனடாவின் பல பகுதிகளிலும் சான்டி புயல்: மக்கள் தவிப்பு(படங்கள்)

ராட்சத புயலான சான்டியால் கனடாவில் பல இடங்களில் புயல் வீச தொடங்கியுள்ளது.
கனடாவின் தெற்கு கியூபெக்கிலும், ஒண்டோரியாவிலும் நேற்று மாலை முதல் சான்டி புயல் வீச தொடங்கியது.
இப்புயல் வேகமாக நகர்ந்து நோவா ஸ்கோட்டியா மற்றும் நியூ புரூன்ஸ்விக் பகுதிகளில் கனமழை பெய்ய கூடும்.
டொரண்டோவில் நேற்றிரவு பலத்த சூறாவளி காற்று வீசியதில், தெருவில் சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது விளம்பர பலகை விழுந்தது. இதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் பலத்த சூறாவளி காற்றும், கனமழையும் பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
ஒண்டோரியா
தெற்கு ஒண்டோரியாவில் 20 முதல் 40 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும் என்றும், அப்போது காற்று 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்றும் கனடா சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
கியூபெக்
கியூபெக்கின் ஒரு சில இடங்களில் 40 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும் என்றும், மழைநீர் பனிக்கட்டியாக உறையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதி
தென்மேற்கு கடலோரப் பகுதிகளில் நாளை முதல் 50 மில்லி மீற்றர் வரை கனமழை பெய்ய தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கடற்கரை பகுதியில் கடல் அலைகள் வேகமாக எழும்பி, கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.