பஸ்கள் மோதல்: 5 பேர் பலி
பெரம்பலூர், ஆக.28: பெரம்பலூர் அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த பஸ் மீது பின்னால் வந்த பஸ் மோதி விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் பலியாயினர். 10 பேர் காயம் அடைந்தனர்.
பெரம்பலூர் - ஆலத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நாரணமங்கலத்தில் இருந்து செல்லும் பஸ் சாலையோரம் நின்றிருந்தது. இதன் மீது சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற பஸ் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் திருச்சி மாநகராட்சி 15வது வார்டு கவுன்சிலர் அமுதா மற்றும் அவர் மகன் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் பெரம்பலூர் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment