
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின்பேரில் 18 தனிக்குழுக்களை அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
26-வது நாளாக கிரானைட் குவாரிகளில் இன்றும் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 90 குவாரிகளில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 45 ஆயிரம் கிரானைட் கற்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.8 ஆயிரம் கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் ஒரு லட்சம் கிரானைட் கற்கள் கண்டு பிடிக்கப்பட்டு மதிப்பிடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு சொந்தமான வெடிமருந்து குடோன், மேலூர் புறக்கூடுமலை அருகே அமைந்துள்ளது. இந்த குடோனில் ஏராளமான வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று அந்த குடோனுக்கு `சீல்' வைத்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment