ஆஸ்திரேலியாவில் புகையிலை நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் சிகரெட்டுகளை எந்தவிதமான விளம்பரங்களும் இல்லாமல் பெட்டியில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் அரசின் உரிமையை நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது
ஆஸியில் இனி சிகரெட் பெட்டிகள் இப்படித்தன்
அரசின் புதிய சட்டத்தின் மூலம், அங்கு அனைத்து புகையிலை நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் சிகரெட் பெட்டிகள் மீது தமது நிறுவனங்களின் முத்திரையையோ அல்லது அந்த சிகரெட்டின் பெயரையோ குறிப்பிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
இனி இப்படி விற்க முடியாது

இந்த நடவடிக்கையின் மூலம்
நாட்டில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று ஆஸ்திரேலிய அரச அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆனால் அரசின் இப்படியான நடவடிக்கை தங்களது வியாபாரத்தை பாதிக்கும் என்றும் புகையிலை வர்த்தகத்தில் ஈடுபடும் பெரு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா போன்ற நாடுகளும் நடவடிக்கை எடுக்கும்?
உலகளவில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் சிகரெட்டை பெட்டிகளில் அடைத்து விற்கப்படும் நடவடிக்கையை எடுக்கும் முதல் நாடாக ஆஸ்திரேலியா வந்துள்ளது.

பல நாடுகள் இந்த வழக்கின் முடிவை எதிர்பார்த்து காத்திருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.
No comments:
Post a Comment