click me

Monday, August 27, 2012

இன்குபேட்டரில் வைத்திருந்த குழந்தை பலி

சென்னை, ஆக., 27 : சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் பிறந்து 15 நாள் ஆன பெண் குழந்தை எடை குறைவு காரணமாக இங்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குழந்தை நேற்று மதியம் இறந்துவிட்டதாக செவிலியர்கள் கூறினர்.
குழந்தை இறந்த துக்கத்துடன் குழந்தையின் உடலைப் பெற்ற உறவினர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் முகம் ஒரு புறம் கடித்துக் குதறப்பட்டிருந்தது. அதைப் பார்த்த உறவினர்கள், குழந்தையை பெருச்சாளி கடித்ததால்தான் குழந்தை உயிரிழந்துள்ளது என்று கூறி மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்பகுதிக்கு வந்த மருத்துவ நிர்வாகிகளும், காவல்துறையினரும் உறவினர்களிடம் பேசி வருகின்றனர்.

No comments:

Post a Comment