click me

Tuesday, September 4, 2012

புதுடெல்லி : இனி ஏடிஎம் சென்று பணம் எடுக்கும்போது கொஞ்சம் உஷாராக இருங்கள்...

புதுடெல்லி : இனி ஏடிஎம் சென்று பணம் எடுக்கும்போது கொஞ்சம் உஷாராக இருங்கள்... பணத்தை கவனமில்லாமல் விட்டு சென்றால், அது திரும்ப உள்ளே போகாது. அப்படியே இருக்கும். ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, வங்கிகள் ஏடிஎம் இயந்திரத்தில் இந்த மாற்றத்தை செய்து வருகின்றன. ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க ஏடிஎம் கார்டை பயன்படுத்திய பிறகு, சில நொடிகளில் பணம் வெளியே வரும். அதை 5 அல்லது 10 நொடிகளில்(இயந்திரத்தை பொறுத்து) எடுக்காவிட்டால், தானாகவே பணம் மீண்டும் உள்ளே போய் விடும். 
   
பணம் வெளியே வரும் போது சிலருக்கு செல்போன் ஒலிக்கும். உடனே அதை எடுத்து அவர் பேசும் போது, சில நொடிகள் லேட் ஆகி விடும். இதுபோன்ற கவனச் சிதறலால் குறிப்பிட்ட நொடியில் பணத்தை எடுக்கா விட்டாலும், சில நோட்டுகளை தவற விட்டாலும் அந்த பணம் மீண்டும் இயந்திரத்தின் உள்ளே போய், அதற்கான ஒரு டிரேயில் சேகரிக்கப்படும். அந்த தொகை மீண்டும் வாடிக்கையாளரின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். தற்போது, ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை உள்ளே இழுக்கும் இந்த வசதியை நீக்கி விடுமாறு அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. 

இதனால், இனி வெளியே வந்த பணம் இயந்திரத்தின் வாய் பகுதியிலேயே இருக்கும். நாம் மறந்து விட்டு சென்றாலோ, கவனக்குறைவாக சில நோட்டுகளை விட்டு சென்றாலோ, அதை வேறு யாராவது எடுத்து கொள்ள நேரிடும். இது குறித்த விவரங்களை ஹெச்டிஎப்சி வங்கி தனது ஏடிஎம் மையங்களில் அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.
எனவே, நாம் இனி ஏடிஎம்களில் இரட்டிப்பு கவனத்துடன் இருக்க வேண்டும். கவனக் குறைவால் பணத்தை விட்டால் அடுத்து வருபவரின் பர்ஸ் நிறைந்து விடும்.

No comments:

Post a Comment