சூரியனில் தோன்றியுள்ள சூறாவளி (Solar storm) காரணமாக இன்னும் சில மணி நேரங்களில் பூமிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூறாவளியிலிருந்து வெளிப்படவுள்ள கதிர்வீச்சுக்கள் பூமியைப் பாதித்து சராசரியான கதிர்வீச்சுப் புயலைத் தோற்றுவிக்கவுள்ளது எனக் கூறப்படுகின்றது.
மேலும் விஞ்ஞானிகள் சூரியனில் தோன்றியுள்ள சூறாவளியை ஆய்வு செய்து அதனால் ஏற்பட உள்ள கதிர்வீச்சு வெடிப்புக்கள் பூமியில் மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொழிநுட்பம் என்பவற்றை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த விபரங்களைக் கற்க உள்ளனர்.
இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கக் கூடிய இக்கதிர்வீச்சுப் புயல் சூரியனின் மேற்பரப்பில் இருந்து அரை மில்லியன் மைல்கள் நீளமானதாகும்.
இத்தகவலை நாசாவின் சூரிய இயக்க ஆய்வகம் (Solar Dynamics Observatory - SDO) உறுதி செய்துள்ளது.





No comments:
Post a Comment