பரங்கிப்பேட்டை: கண்மணி கவரிங் கடையில் மின்கசிவு காரணமாக நேற்று இரவு தீப்பற்றி எரிந்தது
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவில் உள்ள பிரபல பேன்சி கவரிங் கடையான கண்மணி கவரிங் கடையில் மின்கசிவு காரணமாக நேற்று இரவு தீப்பற்றி எரிந்தது. அருகில் கடை வைத்திருப்பவர்கள் ஓடிவந்து தீயை அனைத்தனர். இதற்கிடையில் கடையின் உரிமையாளருக்கும், தீயனனப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டடது. சற்று நேரத்தில் வந்து சேர்ந்த தீயனைப்பு துறையினர் தீயை முழுவதும் அனைத்தனர்.இதில், பெரும்பாலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. சேதமதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் இருக்கும் என இக்கடையின் உரிமையாளர் தெரிவித்தார். மின்சாரமே கசிந்து கசிந்து வினியோகிக்கப்படும் நிலையில், மின்கசிவினால் ஏற்பட்ட இந்த தீவிபத்து கடையின் உரிமையாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
\\\
நன்றி my pno
No comments:
Post a Comment