click me

Wednesday, September 5, 2012

அமெரிக்கா பத்திரிக்கைகளின் தொடர் விமர்சனங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆளாகி வருகின்றார்.

ஏற்கனவே அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான டைம், மன்மோகன் திறமை இல்லாத பிரதமர் என விமர்சனம் செய்திருந்தது.
இந்நிலையில் அந்நாட்டின் மற்றொரு பத்திரிகையான தி வாஷிங்டன் போஸ்ட் ஊழல் நிறைந்த அரசை மன்மோகன் வழி நடத்துபவர் என கடுமையாக தாக்கியுள்ளது.
வரலாற்று நிபுணரும், காந்திக்கு பிறகு இந்தியா (இண்டியா ஆப்டர் காந்தி) என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ராமசந்திர குகா என்பவர் எழுதிய ஒரு கட்டுரை தி வாஷிங்டன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: 79 வது நிரம்பிய பிரதமர் மன்மோகன்சிங் கூச்ச சுபாவம் மிகுந்த மிகவும் மென்மையாக பேசக் கூடியவர்.
இந்திய பிரதமர்களிலேயே தோல்வியின் அபாய விளிம்பில் நிற்பவர். இந்திய வரலாற்றில் துயரமான மனிதர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
தனது அச்சத்தின் காரணமாக மனநிலை பாதிப்புக்கு ஆளானவராகவும், திருப்தியற்றவராகவும், புரிந்து கொள்ளும் திறன் அற்றவராகவும் உள்ளார். ஊழல் நிறைந்த அரசை வழிநடத்தி செல்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment