
இந்த அணுகுண்டு தங்கள் நாட்டுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் என்று இஸ்ரேல் கருதுகிறது. எனவே அதை அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீப காலமாக இஸ்ரேல் தனது படையை பல்வேறு வகையிலும் தயார்படுத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அடிக்கடி ராணுவ ரகசிய கூட்டங்களும் நடந்து வருகின்றன. எந்நேரத்திலும் இஸ்ரேல் விமானங்கள் ஈரானுக்குள் பறந்து அணுஉலை மீது குண்டுவீசி தாக்கலாம் என்ற நிலை உள்ளது.
அதன் விமான படைகள் முழுவீச்சில் தயார் நிலையில் இருக்கின்றன. விமான எதிர்ப்பு பீரங்கிகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் தாக்கினால் உடனே இஸ்ரேல் மீது போர் தொடுத்து அந்த நாட்டில் தாக்குதல் நடத்துவதற்கும் ஈரான் தயாராகி வருகிறது.
No comments:
Post a Comment