click me

Monday, September 3, 2012

திருமண மோசடி உட்பட 4 பிரிவுகளின் கீழ் கேரள அழகி சகானா மீது வழக்கு பதிவு

கேரளா அழகி சகானாவை பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தால் பல உண்மைகள் வெளியாகும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.
கேரளா மாநிலம் பத்தினம் திட்டவைச் சேர்ந்த சகானா, திருமணம் மூலமாக சினிமா உதவி இயக்குனர் உட்பட 4 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதன் காரணமாக தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் பெங்களூரில் கைது செய்யப்பட்ட சகானா நேற்று சென்னை கொண்டு வரப்பட்டார்.
இவரிடம் நடத்திய விசாரணையில், ஆடம்பர வாழ்க்கைக்காகவே 4 பேரையும் திருமணம் செய்து ஏமாற்றினேன் என்று ஒப்புக்கொண்டார்.
தற்போது புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சகானா மீது, மோசடி, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தால் பல உண்மைகள் வெளியாகும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment