முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே... எப்படிஅல்லாஹ் கட்டளையிட்ட ஐவேளைத் தொழுகையை தொழுவதிலும்,நோன்பு நோற்பதிலும், ஸகாத்4 தருவதிலும் நமக்கு கூலிகள்உண்டோ... அதே போன்றுதான், அல்லாஹ்வின் கட்டளையை மதித்துஇந்த உதிரப்போக்கு காலங்களில் நாம் தொழுகாமல் இருப்பதற்கும்கூலி கிடைக்கிறது. ஆம், அல்லாஹ்வின் கட்டளையைபின்பற்றித்தான் நம் தொழுகையை விட்டிருக்கிறோம் அல்லவா....எனவே அதுவும் ஓர் இபாதத்தே.... எனவே முதலில் அந்தக்கவலையிலிருந்து மீண்டெழுங்கள்.
இரண்டாவது, இது தீண்டாமை போன்றதொரு கொடிய நோயோ,தீட்டோ அல்ல. மாறாக, தஹாரா என்னும் தூய நிலையை வராத ஒருஇயற்கை/நிலை மட்டுமே. எவ்வாறு ‘ஜனாபா5’ நிலையை அடைந்தால்ஆண், பெண் இருவருக்குமே ‘தூய்மை’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதோஅதே போல் இந்த நிலையும் வெளிப்புற அசுத்தமே தவிரஅல்லாஹ்வின் முன் நிற்கக்கூடியவரின் அகத்தூய்மையைகேள்விக்குறியாக்கும் தீட்டல்ல. இதனையே அன்னை ஆயிஷா (ரலி)அவர்களின் ஓர் ஹதீஸ்6சில் குறிப்பிட்டுள்ளார்.
'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்)அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனைஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்" எனஆயிஷா(ரலி) அறிவி த்தார். (புகாரி 1:6:297)
தீட்டாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இத்தகையநிலையில் அன்னையின் மடியில் தலை வைத்து குர்’ஆன் ஓதசெய்திருப்பார்களா?
உடலாலும் மனதாலும் தளர்ந்து போயிருக்கும் நம்மைகஷ்டப்படுத்தாமல் இபாதத்தை இலகுவாக்கவே அல்லாஹ் தந்த பரிசுஎன்பதை நினைவில் வையுங்கள். அதுவும் விட்டுப்போயிருக்கும்நோன்பை மட்டுமே நமக்கு மீண்டும் பிடிக்க கட்டளையுள்ளது.விட்டுப்போன தொழுகைகளையல்ல. அதையும் யோசித்துப் பாருங்கள்.மார்க்கத்தை நமக்காக எத்தனை இலகுவாக்கி தந்துள்ளான் நம்இறைவன் என்பது புரியும். அல்லாஹு அக்பர்.
எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் கூறி இருப்பது போல,அனைத்து பொருட்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை உண்டு, ஒருஒழுங்கு உண்டு, அது போல நமக்கும் வைத்துள்ளான். எப்படிசூரியனுக்கும் சந்திரனுக்கும் அததற்கான ஆர்பிட் / வழி உள்ளதோ அதேபோல பெண்களுக்கும் இந்த குறிப்பிட்ட காலத்தை ஒரு ஒழுங்காகஅமைத்துள்ளான்.
(உஹதுப் போரில்) உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டதுஎன்றால் அதே போன்று அக்கூட்டத்தினருக்கும் (பத்ருபோரில்) காயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய (சோதனைக்)காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறிவரச்செய்கிறோம். இதற்குக்காரணம் நம்பிக்கைகொன்டோரை அல்லாஹ் அறிவதற்கும் உங்களில்உயிர்தியாகம் செய்வோரை உருவாக்குவதற்குமே ஆகும்.அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.(ஆலெஇம்ரான்:140)
இன்னும் ஒரு விஷயம் உற்று நோக்கினால் புரிபடும். அது ரமதானைநாம் தராவீஹ்7 + தொழுகை + குர்’ஆன் என்னும் மூன்றுவிஷயங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதை. தொழுகைஇல்லாதபோதுதான் மற்ற விஷயங்களைப் பற்றி நமக்கு தெரியவும்வருகிறது, அதன் மேலும் நம் ஃபோகஸை கொண்டு போக முடிகிறது.உதாரணத்திற்கு
“என்மீது அதிகமாக ஸலவாத்தை ஓதுபவர் கியாமத்துநாளில் என்னை அதிகம் நெருங்கியிருப்பார்! என்று நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா (ரலி)அறிவித்துள்ளார்.”
என்னும் ஹதீஸ்சை நினைத்துப் பாருங்கள். எந்தளவிற்கு நாம்ஸலவாத்8தை நினைக்கிறோம் அல்லது ஓதுகின்றோம்??தொழுகையில் அத்தஹியாத்9திற்கு பிறகு ஓதுவதோடு பலர் நிறுத்திக்கொள்கிறோம். அதன் மகத்தான கூலியை மேலே படித்துப்பாருங்கள்.......
அதே போல்தான் நோன்பாளிகளுக்கு உணவளிப்பதும், திக்ருசெய்வதும், து’ஆ செய்வதும்.
- 'எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோஅவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும்கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில்எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது' என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி)
- “து’ஆ என்பது வணக்க வழிபாட்டின் சாராம்சமாகும்.” (அஹ்மத், திர்மிதி, ஹஸன் ஸஹீஹ்)
- (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம்கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவேஇருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின்பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால்விடையளிக்கிறேன்; அவர்கள்என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையேநம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியைஅடைவார்கள்” என்று கூறுவீராக. (பகரா 2:185)
அல்லாஹ் எந்த இபாதத்தின் கூலியையும் குறைத்துக்கொடுப்பவனல்ல. ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த நன்மைக்கானகூலியை வழங்குவேன் என்று வாக்களித்துள்ளான். அதுவும்அணுவளவும் குறையாமல். இன்னும் குர்’ஆனை திலாவத்தாக மட்டும்அல்லாமல் மனனம் செய்யவோ, கற்கவோ, கற்றுக்கொடுக்கவோ கூடசெய்யலாம். வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு புதிதாக ஒரு சூறா / குர்’ஆனின் அத்தியாயம் கற்றுக்கொடுக்கலாம். அல்லது நீங்களேமனனம் செய்யலாம்.
இன்னும் ஈஈஈஈஸியான வழி, அவரவர் செல்ஃபோன் மூலமாகவோ,மடிக்கணிணி மூலமாகவோ, அல்லது டேப் ரிக்கார்டர், ஆடியோசிஸ்டம் கொண்டோ எத்தனை முறை வேண்டுமானாலும் கேளுங்கள்,மகிழுங்கள், மனனம் செய்யுங்கள். அல்லது மனனம் செய்து மறந்துபோன சூறா எனில் அதை மீண்டும் சரி செய்து கொள்ளுங்கள். மாஷாஅல்லாஹ்.... நினைத்துப் பாருங்கள், தொழும் நிலையில்இருக்கும்போது இத்தனை விதத்தையும் நாம் எண்ணிப்பார்க்கிறோமா??
தஃப்ஸீர்10 படிப்பதற்கும், படித்ததை பகிர்வதற்கும், அதற்கானகூலிகளும் உண்டு. எத்தனை விதமான தஃப்ஸீர்கள் உள்ளன.ஒவ்வொன்றிலும் எத்தனை படிப்பினைகள் உள்ளன... எத்தனைஎத்தனை புதிய செய்திகளை / ஹதீத்துக்களை / ரிவாயத்துக்களைஅறிந்து கொள்ள முடிகிறது??? அதை பகிர்வதிலும் கிடைக்கும்நன்மையை நானோ நீங்களோ அளக்க முடியுமா??
எனவே இந்த காலத்தை (ஹைல் / நிஃபாஸ்) துவண்டு போகும் காலமாகஅன்றி, நமக்கு ஒரு இடைவேளை தரப்பட்டுள்ளது, அதுவும்அல்லாஹ்விடமிருந்து, அதை மனதார ஏற்றுக்கொள்வதிலும் நமக்குகூலியுண்டு என்பதை நினைவில் வையுங்கள். தொழுகையும்,நோன்பும் மட்டுமே இபாதத்தல்ல என்பதை புரிந்து கொள்ளவும் ஏனையஅமல்களிலும் திக்ரையும், இறையச்சத்தையும் கொண்டு வர வேண்டும்என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளவும் இந்த காலத்தைஒதுக்குங்கள்.
இன்ஷா அல்லாஹ், இனி நடைமுறையில் செய்யக்கூடிய, நற்கூலியைபெற்றுத்தரும் செயல்களை ஒரு சேர பார்ப்போம்.
- நோன்பாளிகளுக்கு உணவு தயார் செய்யவும், பரிமாறவும்,இஃப்தார் குழுக்களிலும் பங்கு பெறுங்கள்.
- இஃப்தார் முடிந்த பின் மஸ்ஜிதில் சுத்தப்படுத்தும் வேலையில்பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
- தராவீஹ் தொழுக வரும் தாய்மார்களின் குழந்தைகளை (Baby Care) கவனித்துக்கொள்ளுங்கள். அதனால் எவ்வளவு நன்மையோசியுங்கள். குழந்தையின் தாய்மார் மட்டுமல்ல. இன்னும்மற்றவர்களும் சிரமம் இன்றி தொழுகையில் ஒன்றி தொழுகமுடியும். அதற்கான கூலியும்....மாஷா அல்லாஹ் :))
- இது வரை மனனம் செய்யாத சூறாக்கள், து’ஆக்களை மனனம்செய்யுங்கள்.
- வீட்டிலுள்ள வயதானோருக்கு (எழுத படிக்க இயலாமல்இருப்பவர்களுக்கு) மற்றும் குழந்தைகளுக்கு சூறாக்களையும்,து’ஆக்களையும் கற்றுக் கொடுங்கள். தஃப்சீர் உரக்க படித்துக்காட்டுங்கள்.
- உங்கள் வீட்டிலுள்ள / தெருவில் / அணுகக் கூடியஅருகாமையில் உள்ள நோன்பு வைக்கும் வயதானோருக்கு /ஏழைகளுக்கு / சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு / புதிதாய்இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உணவுக்கும் / மற்றதேவைகளுக்கும் உதவுங்கள்.
“யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோஅவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.”
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி). நூல்: புகாரீ 2262, முஸ்லிம்
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி). நூல்: புகாரீ 2262, முஸ்லிம்
(உங்களின் வீட்டுக்கு இஃப்தாருக்கு அழைத்துப்பாருங்களேன்...இன்னும் அதிகமான மகிழ்ச்சி, கூலி மாஷா அல்லாஹ்)
- நிஃபாஸில் இருக்கும் தாய்மார்களே... உங்கள் குழந்தைக்குபாலூட்டும் ஒவ்வொரு முறையும்(மற்ற எல்லாவேளைகளிலும் கூட:) ) ஒரு சூறாவோ/து’ஆவோ/திக்ரோஅதிகமதிகம் ஓதுங்கள். பக்கத்தில் ஒரு ஆடியோ பிளேயர்வைத்து குர்’ஆனோ / தஃப்ஸீரோ ஒலிக்க வையுங்கள். உங்கள்மேலும், இன்ஷாஅல்லாஹ் உங்களின் குழந்தை மேலும் அதன்எஃபெக்ட்டை உணர முடியும் (இது சொந்த அனுபவமே....)
- அதிகமதிகம் திக்ரு செய்யுங்கள். இதுவரை மனனம் செய்யாதகாலை மற்றும் மாலை திக்ருக்களை மனனம் செய்யுங்கள்.ஃபஜ்ரிலும் அஸ்ரிலும் மற்றவர்கள் தொழும்போது நீங்களும்அமர்ந்து அந்தந்த வேளைகளுக்கான திக்ருக்களை ஓதுங்கள்.
- இரவில் தஹஜ்ஜுத் நேரத்தில் எழுந்து, உள்ளம் ஒன்றி, கண்ணீர்மல்க து’ஆ கேளுங்கள். து’ஆவிற்கு முன்னும் பின்னும்திக்ரையும், ஸலவாத்தையும் அதிகப்படுத்துங்கள்.
- வீட்டில் பிரிண்டர் / சிடி ரைட்டர் இருந்தால் இலவசமாகது’ஆக்கள் / திக்ருக்களை பிரிண்ட் செய்தோ / சிடியில் காப்பிசெய்தோ எத்தனை பேருக்கு இயலுமோ பகிருங்கள். (இதைஅச்சிட்டது / காப்பி செய்தது...ஜனாப் / ஹாஜி/இன்னாரின்ஹக்கில் து’ஆ---- என்னும் போஸ்டரெல்லாம் அடிக்காமல்இன்ஷா அல்லாஹ்.... :)) )
- தஜ்வீத் சரி செய்து கொள்ளவும், அதன் சட்டங்களைகற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும், தகவல்களை /பாடங்களை பகிர்ந்து கொள்ளவும் நேரம் ஒதுக்குங்கள்.
- அஸ்மா உல் ஹுஸ்னாவை மனனம் செய்யுங்கள். அதற்கானகூலியும் உண்டு...கூடவே உங்களின் து’ஆக்களின் போதுஅல்லாஹ்வின் எந்தப்பெயரை உபயோகிக்கலாம் என்பதுதெள்ளென விளங்கும்....
“அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. யார் அவற்றைமனனமிட்டுக்கொள்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்!” என நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். (புகாரி 6410, முஸ்லிம் 2677)இன்னும் அதிகமாகவும் து’ஆவில் ஒன்ற வைக்கும்.
- ஈத் பெருநாளைக்கான ஷாப்பிங்கையெல்லாம் இந்தநேரங்களில் வைத்துக் கொண்டால் தொழும் நிலைகிடைக்கும்போது அதைப்பற்றிய கவலை இருக்காது.
- இன்னும் வேறு எந்த விதத்தில் நற்கூலி பெறலாம் என்றுஉங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள்....அதுவே உங்களுக்கு இன்னும் பல வழிகளைக் காட்டும் இன்ஷாஅல்லாஹ். மனித மனம் எப்படிப்பட்டதெனில், ஒரு கதவுமூடப்படும்போதுதான் மற்ற வழிகளை தேட ஆரம்பிக்கும் :)
மிக முக்கியமாக, ஹலால்11-ஆன அமல்களை செய்வதை விடவும்,ஹராம்12-ஆன செய்கைகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வதே மிகமிக முக்கியமானது, மேன்மையானது. எனவே புறம் பேசுவதைவிட்டும், அவதூறு சொல்வதை விட்டும், பொய்யிலிருந்தும், வீண்பேச்சுக்களிலிருந்தும், நேரத்தை வீணாக்கும் செயல்களிலிருந்தும்காத்துக்கொள்ளுங்கள். இந்த காலமானது உங்களைஅல்லாஹ்விடமிருந்து தூரமாக்குவதில்லை, உங்களின்அமல்களில் குறை வைப்பதில்லை என்பதையும் ஆனால் வீண்செயல்களால் குறையேற்படக்கூடும் என்பதையும் நினைவில்வையுங்கள்.
இன்ஷா அல்லாஹ் இந்த இடைவெளியானது இன்னும் அதிகஈர்ப்புடனும், சக்தியுடனும், பலமான ஈமானுடனும் உங்களை தயார்செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவேமகிழ்ச்சியுடனும், ஒவ்வொரு அமலுக்கும் கூலி இருப்பதில் நம்பிக்கைகொண்டும் களத்தில் இறங்குங்கள்.
...அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர,உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்டநாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்திசெய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காகஅல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றிசெலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம்நாடுகிறான்)... (2:185) நன்றி;ஆமினா
No comments:
Post a Comment